தமிழ்ப் பணி மன்றம் முகநூலில் அதன் ஆட்சியர் திரு.வை.வேதரெத்தினம் அவர்கள் எழுதிவரும் காலச் சுவடுகள் பற்றி நான் எழுதிய கருத்துரைப் பாடல்கள் !
---------------------------------------------------------------------------
வளர்தமிழை நாளும் வளர்க்கின்ற செம்மல் !
மலர்ந்ததிரு நாளில் வணங்குகிறேன் – அன்னார்,
இளங்காலைப் போதின் இனியதென்றல், நெஞ்ச
நலங்கொண்டு வாழ்வார்பன் னாள்.
சுவடு 14 தொடர்பாக நான் எழுதிய கருத்துரை !
(03-05-2020)
(03-05-2020)
அரியபல சொற்கள் ! அரிய நினைவாற்றல் !
புரிய வைக்கும் புலமை - அரிய,
பெரியீர்
! இணையாய்ப் பிறிதொருவர் இல்லை !
சரியாயாள் கின்றீர் தமிழ் !
பண்டகத்துக் காப்பாளர்
! பைந்தமிழ்க்கும் காப்பாளர்
!
மன்றல்தம் தங்கைக்குப் பாட்டால் நடத்திவைத்த,
தன்தந்தை தம்நிலையார் ! தாழா உயர்வாழ்க்கை !
பண்பாட்டுச் செம்மல் ! மறைமணியை வணங்குகின்றேன் !
சுவடு 27 தொடர்பாக நான் எழுதிய கருத்துரை !
(16-05-2020)
(16-05-2020)
கனிந்த தமிழ்ப்பேர்கள்
கலைச்சொற்க ளாக்கம் !
இணையில் நினைவாற்றல் எல்லாம் - இணைந்த
மணியே மறைமணியார் ! மற்றென்ன சொல்ல
?
தனித்தன்மை வாய்ந்த தகை !
சுவடு 32 தொடர்பாக நான் எழுதிய கருத்துரை !
(21-05-2020)
(21-05-2020)
சொல்லும் முறையழகு; துன்ப நிகழ்ச்சிகளை
மெல்லத் துயரயிழை மேலோட, - சொல்லுகின்ற
பண்டகத்துப் காப்பாளர் வல்லார் மறைமணியார்,
தண்டமிழ்க்கும் காப்பாளர் தான் !
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
அரசி பழனியப்பன்
(palaniappanarasi@gmail.com)
(தி.பி.2051,விடை(வைகாசி),11)
(24-05-2020)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------